பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் படத்திற்குக் கிடைத்த வெற்றி காரணமாகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர், அடுத்தாக பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.
ஆனால் இப்படத்திற்கு முன் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான முதற்கட்ட பணியையும் அவர் தொடங்கியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ‘மாமன்னன்’ என பெயரிடப்பட்டுள்ளது. அத்துடன் படக்குழு டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் பெரிய கல்லுக்கு கீழே மாடுகள், காக்கைகள் மேலும் கீழுமாக பார்ப்பதை பார்த்த ரசிகர்கள் மாரி செல்வராஜூம் உதயநிதியும் பலமான சம்பவத்திற்கு தயாராகிவிட்டார்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.