தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் கானபூர் சர்வீஸ் சாலையில் அதிவேகமாக வந்த காரில் திடீரென தீ பிடித்து கொண்டது. சில நிமிடங்களிலேயே கார் முழுவதும் தீயில் எரிய தொடங்கியது.
இதில் காரை ஓட்டி வந்த இளைஞர் தீயில் படுகாயத்துடன் கதவை திறந்து வெளியே வந்து நடைபாதையில் படுத்துகொண்டு துடிதுடித்து அதே இடத்தில் இறந்தார். மேலும் காரில் அவருடன் வந்த பெண்ணும் தீயில் சிக்கி உயிருடன் கருகினர்.
இதையும் படியுங்க: Homework காட்டச் சென்ற 3-ம் வகுப்பு மாணவி.. அடுத்த நொடியில் நடந்த துயரம்!
அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். தகவல் அறிந்த மல்காஜிகிரி ஏசிபி சக்கரபாணி, கட்கேசர் சி.ஐ. பரசுராம் விபத்துக்குள்ளான காரை ஓட்டி வந்தவர் குறித்து விசாரனை செய்தனர்.
இதில் நாரப்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீராம் (26) என்பதும் அவர் மொத்த சைக்கிள் கடை வியாபாரம் செய்து வருவதும் மெடிப்பள்ளியில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்சியில் செல்ப் டிரைவிங் கார் வாடகைக்கு எடுத்து கொண்டு செல்லும் போது கார் தீ விபத்து ஏற்பட்டு இறந்ததை கண்டறிந்தனர்.
ஆனால் காரில் ஸ்ரீராமுடன் இருந்தவர் மைனர் சிறுமி என்றும்,இது திட்டமிட்டே நடந்திருக்கக் கூடும் என்பதால் தற்கொலையா அல்லது சிறுமியை கொலை செய்து வாலிபரும் தற்கொலை செய்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.