சென்னை ; செங்குன்றத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை செங்குன்றம் காமராஜர் நகர் ஜி.என்.டி.புறவழிச் சாலையில் பழைய சார் பதிவாளர் அலுவலகம் அருகே தனியாருக்கு சொந்தமான எச்டிஎப்சி வங்கி இயங்கி வருகின்றது. இங்கு அந்த வங்கியின் ஏடிஎம் மையமும் உள்ளது.
மேலும் படிக்க: பெற்ற தாயையே கத்தியால் குத்திக் கொன்ற மகன்… சிறுசண்டையால் சின்னாபின்னமான குடும்பம்.. போலீசார் விசாரணை
நள்ளிரவில் இந்த ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர், கல்லை கொண்டு உடைக்க முயற்சித்தபோது, இதனை சிசிடிவி காட்சியில் கண்காணித்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த செக்யூரிட்டி, இது தொடர்பாக செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இந்த தகவலின் பேரில் செங்குன்றம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். காவலர்களை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து செங்குன்றம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செங்குன்றம் அடுத்த வடகரையை சேர்ந்த அலெக்ஸாண்டர் (40) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வங்கி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் செங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.