சிதம்பரம் அருகே பாட்டியின் பாதுகாப்பில் வளர்ந்து வந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் சித்தப்பாவும், உடந்தையாக இருந்த அப்பாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தை அடுத்த புதுக்குப்பத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மனைவி இறந்து விட்ட நிலையில், 13 வயது மகளும், 14 வயது மகனும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வருகின்றனர்.
சிறுமியின் சித்தப்பா ஆனந்த ஜோதி, சிறுமியை அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இதை சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்தும், அவர் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்.
இதுகுறித்து சிறுமியின் அண்ணனுக்கு தெரியவந்து, அவர் சென்னையில் உள்ள உறவினரான ஜெயப்பிரதாவுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், சிறுமியை அவருடைய சித்தப்பா தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரையும், சிறுமியின் தந்தையையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் உடந்தையாக இருந்ததாக உறவினர்கள் ரேவதி, பிரேமா, வனஜா ஆகிய மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.