ஒரே நாளில் ஏடிஎம்களில் அடுத்தடுத்து பேட்டரிகள் திருட்டு : குற்றவாளியின் வாக்கு மூலத்தால் ஆடிப்போன போலீஸ்

Author: kavin kumar
3 February 2022, 8:01 pm
Quick Share

கோவை : கோவையில் ஒரே நாளில் ஏடிஎம்களில் அடுத்தடுத்து பேட்டரிகள் திருடுபோன வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

கோவை ஏடிஎம்களில் தொடர்ந்து பேட்டரிகள் திருடு போக கூடிய சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் போலீசார் விசாரணை நடத்தி திருடர்களை பிடிக்க தீவிரம் காட்டியுள்ளனர்.இந்நிலையில் வெரைட்டிஹால் பகுதி ஏடி.எம்.ஒன்றில் பேட்டரிகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து வெரைட்டி ஹால் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிங்காநல்லூர் பகுதியிலும் பேட்டரி காணாமல் போனது தெரிய வந்தது.ஒரே நாளில் அடுத்தடுத்து பேட்டரிகள் திருடுபோன சம்பவத்தால் போலீசார் ஏடிஎம்களில் முகாமிட்டனர்.

இந்த நிலையில் சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமையிலான போலீசார் பேட்டரி காணாமல்போன வங்கி அதிகாரிகள் தந்த புகாரின் அடிப்படையில் புலனாய்வு செய்த நிலையில் செந்தில் குமார் என்ற நபரை கைது செய்தனர். செந்தில் குமாரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலீசார் அதிர்ந்து போகும் அளவிற்கு வாக்குமூலம் தந்திருக்கிறார். பேட்டரி திருடுவதற்கு சாதாரணமாக சென்றால் போலீசாரிடம் மாட்டிவிடுவோமென நினைத்து பேட்டரி மெக்கானிக் போன்று ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பட்டப்பகலிலேயே பேட்டரிகளை திருடி இருக்கின்றார்.

பேட்டரிகளை கழட்டும்போது வாடிக்கையாளர்கள் கேட்டால் நான் மெக்கானிக் என்றும் பேட்டரியை சரிசெய்ய வந்து இருப்பதாகவும் தெரிவித்து லாவகமாக பேட்டரியை திருடி பழைய இரும்பு கடையில் விற்று வந்திருக்கிறார். இரவு நேரங்களில் பேட்டரி திருடுவதற்கு ஏடிஎம்களுக்கு சென்றால் போலீஸ் வந்து விடுவோமென்று எண்ணி பேட்டரி திருடும் திருட்டு சம்பவத்தை பட்டப்பகலிலேயே துணிகரமாக நிகழ்த்திய செந்தில்குமார் கோவை ஏடிஎம்களில் பேட்டரிகளை கொள்ளையடித்து இருக்கிறார்.

திருடர்களை பிடிக்க இரவில் போலீசார் ரோந்து செல்கின்ற நிலையில் பட்டப்பகலில் மெக்கானிக் போர்வையில் ஏடிஎம்களில் திருடினால் மாட்டிக் கொள்ள மாட்டோம் என்கின்ற யுக்தியின கையாண்ட செந்தில் பேட்டரிகளை மட்டுமே குறிவைத்து அதுவும் பட்டப்பகலிலேயே திருடுவது வாடிக்கையான செயலாக கடைபிடித்து வந்ததும் தெரிய வந்தது.பேட்டரிகளை மட்டுமே திருடி போலீசாரிடம் அகப்படாமல் இருக்க செந்தில்குமார் வகுத்த செயல்திட்டம் போலீசையே அதிர செய்திருக்கின்றன. இந்நிலையில், செந்தில்குமாரை சிங்காநல்லூர் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.

Views: - 1045

0

0