Categories: தமிழகம்

பீர் பாட்டிலால் தாக்கி வழிப்பறி செய்த கும்பல்.. ரத்த காயங்களுடன் 2 கி.மீ. நடந்தே சென்று சிகிச்சை பெற்ற டீக்கடைக்காரர்…!!

காஞ்சிபுரம் அருகே வழிப்பறி கும்பல் தாக்கியதில் காயமடைந்தவர், ஒரு மணிநேரத்திற்கு பிறகு 2 கி.மீ. நடந்தே சென்று தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று விட்டு, 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அவளூர் கூட்டுச்சாலையில் பாலமுருகன் என்பவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே டீ கடை மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் பாலமுருகன் மதுபானம் வாங்கி ஒதுக்குப்புறமாக அமர்ந்து மதுபானம் அருந்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மதுபானம் அருந்திக் கொண்டிருந்தபோது ஒரே பைக்கில் வந்த மூன்று மர்ம நபர்கள் பாலமுருகனிடம் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லை எனக் கூறவே ஏடிஎம் கார்டை கேட்டுள்ளனர். ஏடிஎம் கார்டு கொண்டு வரவில்லை என கூறியதை கேட்டு ஆவேசமடைந்த அந்த மர்ம நபர்கள், பாலமுருகனை திடீரென கத்தியால் தாக்கினர். மேலும் அங்கிருந்த பீர் பாட்டிலால் அடித்துள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த பாலமுருகனிடமிருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஹோண்டா ஸ்ப்ளெண்டர் பைக் மற்றும் 17 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் பைக்கில் ஏறி தப்பினர்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த பாலமுருகன் சுமார் ஒரு மணி நேரம் கழித்து எழுந்து அருகே உள்ள பெட்ரோல் பங்கிற்க்கு சென்று போன் பேசணும்னு கேட்டுள்ளார். அவர்கள் போன் கொடுக்க முடியாது என கூறி விரட்டி விட்டனர்.

உடல் முழுவதும் ரத்த காயத்துடன் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பேருந்து நிலையம் அருகே உள்ள ஏபிஜே என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுள்ளார். அவர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்து 108 வாகனத்தின் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழிப்பறி கொள்ளை தொடர்பாக வாலாஜாபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழிப்பறிக் கொள்ளை சம்பவத்திற்கு பின்னர் பைக்கை பறித்து சென்ற நபர்கள், அவளூர் கூட்டு சாலையில் வந்த லாரியை மடக்கி ஓட்டுநரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி பணத்தை பறித்துக் கொண்டதாக தப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

13 minutes ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

14 minutes ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

49 minutes ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

1 hour ago

மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!

வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…

2 hours ago

எனக்கும் அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க- நெட்டிசன்களின் வலையில் சிக்கிய அதிதி பாலன்…

மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…

3 hours ago

This website uses cookies.