குமரி மாவட்டம் ஆலங்கோடு அருகே சொத்து பிரச்சனையில் தாயாரை கழிவு நீர் குழிக்குள் தள்ளி தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் வள்ளியம்மா (73). வயதான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் லாரன்ஸுக்கும், இளைய மகனுக்கும் இடையே சொத்து தகராறு நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் பின்புறத்தில் குளித்துக்கொண்டிருந்த தாயார் வள்ளியம்மாவை அவரது மகன் லாரன்ஸ் கழிவு நீர் தேக்கி வைப்பதற்காக தோண்டப்பட்டிருந்த குழிக்குள் தள்ளி விட்டு தாக்குதல் நடத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
இதனை அவரது இளைய மருமகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். அவரையும், லாரன்ஸ் தாக்கி காயப்படுத்தி உள்ளார். இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.