தூத்துக்குடி அண்ணாநகர் சலவை கூடத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி தெற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
தூத்துக்குடி அண்ணா நகரில் சலவைத் தொழிலாளர் கூடம் உள்ளது. இந்த சலவை தொழிலாளர் கூடத்தில் ஒருவரை கொலை செய்து விட்டதாக கூறி, லோடுமேன் வேலை பார்க்கும் தூத்துக்குடி மில்லர்புரம் ஹவுஸிங் போர்டு பகுதியைச் சார்ந்த சண்முகம் மகன் மாரியப்பன் (43) தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் தூத்துக்குடி அண்ணா நகர் 1வது தெருவை சார்ந்த சுப்பையா மகன் சப்பானி முத்து (42) என்பதும், இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும், இவர் அயர்னிங் மற்றும் கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் வழக்கம்போல் மதுஅருந்தி விட்டு வந்து சலவை கூடத்தில் படுத்து உறங்குவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவரும் மது அருந்திய நிலையில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் அதே இடத்தில் படுத்து உறங்கியுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து எழுந்த மாரியப்பன் சப்பானி முத்துவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, தான் தப்பித்தால் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
போலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.