சென்னை : சென்னை அருகே இரவில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த மனைவியை சரமாரியாக கத்தியால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை புளியந்தோப்பு பி.எஸ். மூர்த்தி நகர் எச்.பிளாக் பகுதியை சேர்ந்தவர் முருகன் (41). இவரது மனைவி ராஜேஸ்வரி (36). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். முருகன் ஆட்டு தொட்டியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறார்.
உறவினரின் இல்ல நிகழ்ச்சிக்காக ராஜேஸ்வரி அவரது கணவர் முருகன் உள்ளிட்ட குடும்பத்தினர் மரக்காணம் வரை சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வந்துள்ளனர். குழந்தைகள் இருவரும் புளியந்தோப்பில் உள்ள உறவினர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது, ராஜேஸ்வரி இரவு ஒரு மணிக்கு யாருக்கோ போன் செய்து நீண்ட நேரம் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் அவரிடம் இந்த நேரத்தில் யாரிடம் பேசுகிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் முருகன் வீட்டில் இருந்த ஆடு வெட்டும் கத்தியை எடுத்து ராஜேஸ்வரியின் வயிறு, தொடை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் ராஜேஸ்வரி சத்தம் போட்டு சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். ராஜேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
This website uses cookies.