சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் மட்டுமே தங்கள் கைவரிசையை காட்டி சங்கிலிகளை பறித்து செல்கிறார்கள் என்று கருதினால் அது தவறு என்பதை ஹைதராபாத்தை சேர்ந்த திருடன் ஒருவன் உறுதிப்படுத்தி இருக்கிறான்.
ஹைடெக் சிட்டி என்ற பெயர் பெற்ற ஹைதராபாத் நகரில் உள்ள நரசிங்கி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சன் சிட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு பட்ட பகலில் வந்த கொலைகள் ஒருவன் கதவு உட்புறமாக தாளிடப்பட்டிருந்த வீடு ஒன்றின் காலிங் பெல்லை மூன்று முறை அழுத்தினான்.
முகத்தை கர்சி பால் கட்டி மறைத்திருந்த அந்த கொள்ளையன் சற்று நேரம் காத்திருந்த நிலையில் அந்த வீட்டின் பெண் கதவை திறந்தார்.
இதையும் படியுங்க: பார்சலில் வந்த அழுகிய ஆண் சடலம்… விசாரணையில் திக்.. திக்..!!
அப்போது கதவை தள்ளிக் கொண்டு உள்ளே சென்ற திருடன் அந்த பெண் கழுத்தில் அணிதிருந்த மூன்று சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.
அந்தப் பெண் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் ஓடி வந்து திருடனை பிடிக்க முயன்றனர். ஆனால் திருடன் அதற்குள் கீழே இறங்கி தயாராக வைத்திருந்த மோட்டார் பைக்கில் ஏறி தப்பி சென்று விட்டான்.
இந்த கொள்ளை சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ள நர்சிங்கி போலீசார் சங்கிலிப் பறித்து கொண்டு தப்பி ஓடிய திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
This website uses cookies.