தமிழ்நாடு போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வரும் நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வழக்கு தொடர்பாக பத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் காவல் நிலையம் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் காவல் நிலையத்தில் வாசலில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: ராமதாஸ் குறித்து அவதூறு… கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் ; பாமகவினர் பரபரப்பு புகார்..!!!
இதனால் காவல் நிலைய வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் மற்றும் காவல் நிலையத்தில் முன் பக்கம் முழுமையாக இருந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆதரத்தை அழிக்கும் நோக்கோடு, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதும் காரணமா…? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.