தமிழ்நாடு போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் நிலையத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை நடந்து வரும் நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை விஸ்வநாதபுரம் பகுதியில் மாவட்ட போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், வழக்கு தொடர்பாக பத்துக்கு மேற்பட்ட வாகனங்கள் காவல் நிலையம் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் காவல் நிலையத்தில் வாசலில் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்து விட்டு சென்றுள்ளனர்.
மேலும் படிக்க: ராமதாஸ் குறித்து அவதூறு… கொலை மிரட்டல் விடுத்த திமுக பிரமுகர் ; பாமகவினர் பரபரப்பு புகார்..!!!
இதனால் காவல் நிலைய வளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் மற்றும் காவல் நிலையத்தில் முன் பக்கம் முழுமையாக இருந்து நாசமாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆதரத்தை அழிக்கும் நோக்கோடு, இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதா அல்லது வேறு ஏதும் காரணமா…? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.