நீலகிரி: ஊட்டி அருகே பேருந்து நிலையத்தில் நின்ற தொழிலாளியை மனநலம் பாதிக்கப்பட்ட நபர் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஹரி. இவர் ஊட்டி லோயர் பஜார் சாலை உள்ள பேருந்து நிலையத்தில பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது 38 வயதான கார்த்திக் என்பவரும் அங்கு வந்தார். சிறிது நேரம் அங்கு காத்திருந்த பின்னர் பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்த ஹரியை தன் மறைத்து வத்திருந்த கத்தியால் காரத்திக் குத்தினார். இதனை கண்ட சகபயணிகள் பயத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் ரத்த வெள்ளத்தில் துடித்த ஹரியை மீட்டு ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஊட்டியில் பட்டப்பகலில் பேருந்து நிறுத்தத்தில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தொழிலாளியை கத்தியால் குத்திய கார்த்திக் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.