திருச்சி : சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியில் தார்ப்பாயை கிழித்து ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடிய வழக்கில் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியை திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றபோது லாரியின் தார்ப்பாய் கிழிக்கப்பட்டு அதில் 36 பெட்டி அடங்கிய மதுபாட்டில்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து லாரி டிரைவர் மதுராந்தகத்தைச் சேர்ந்த செல்வம்(36) சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். போலீஸ் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், மதுபாட்டில்கள் திருட்டில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி கோடீஸ்வரன்(48),
கீரனூர் பழனிச்சாமி (40), அரக்கோணம் தங்கபாண்டியன் (24), மாதவரம் கிரி(40) உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடி மதுபாட்டில்களை விற்பனை செய்ததில் ரூ.1.40 லட்சம் ரொக்கம் மற்றும் மீதமிருந்த 103 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை விரைந்து நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீசாரை திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
விஜய் என்றால் கூட்டம்… நடிகர் விஜய் சாதாரணமாக பொதுவெளியில் தென்பட்டாலே கூட்டம் அலைமோதிவிடும். அப்படி இருக்கும்போது அவர் பிரியாணி கேட்டால்…
முன்னணி நடிகர் மலையாள சினிமா உலகில் முன்னணி நடிராக வலம் வருபவர் விநாயகன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “ஜெயிலர்”…
அறக்கட்டளைக்கு பத்து கோடி நடிகர் சூர்யா 2006 ஆம் ஆண்டு ஏழை குழந்தைகளின் கல்விக்காக அகரம் அறக்கட்டளை என்ற ஒன்றை…
கரூரில் வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டவர்களுக்கு போலியாக பான்கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை போலி ஆவணங்கள் மூலம் தயாரித்து…
ரஜினியின் பக்தர்கள் தனக்கு பிடித்த நடிகரை கடவுளை போல் பார்க்கும் வழக்கம் தமிழர்களிடம் உண்டு. அதில் முதல் இடத்தில் இருப்பவர்…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்…
This website uses cookies.