Categories: தமிழகம்

நெடுஞ்சாலை பட பாணியில் லாரியின் தார்பாய் கிழித்து ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருட்டு : 5 பேர் கைது

திருச்சி : சமயபுரம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரியில் தார்ப்பாயை கிழித்து ரூ. 2.25 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் திருடிய வழக்கில் 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியை திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடியில் நிறுத்திவிட்டு டிரைவர் டீ குடிக்க சென்றபோது லாரியின் தார்ப்பாய் கிழிக்கப்பட்டு அதில் 36 பெட்டி அடங்கிய மதுபாட்டில்கள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து லாரி டிரைவர் மதுராந்தகத்தைச் சேர்ந்த செல்வம்(36) சமயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். போலீஸ் உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில், மதுபாட்டில்கள் திருட்டில் ஈடுபட்ட கும்மிடிப்பூண்டி கோடீஸ்வரன்(48),

கீரனூர் பழனிச்சாமி (40), அரக்கோணம் தங்கபாண்டியன் (24), மாதவரம் கிரி(40) உள்ளிட்ட 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் திருடி மதுபாட்டில்களை விற்பனை செய்ததில் ரூ.1.40 லட்சம் ரொக்கம் மற்றும் மீதமிருந்த 103 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை விரைந்து நடவடிக்கை எடுத்த தனிப்படை போலீசாரை திருச்சி மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

KavinKumar

Recent Posts

சிசிடிவி வெளியானதால் கொலை செய்த விசிக நிர்வாகி? பெட்ரோல் பங்க் உரிமையாளர் கொலை வழக்கில் திருப்பம்…

கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…

23 minutes ago

என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!

தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…

1 hour ago

அஜித்குமார் வழக்கில் திடீர் திருப்பம்? நிகிதா மீது மோசடி புகார்! தூசிதட்டப்பட்ட பழைய File…

திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…

2 hours ago

நாங்க இருக்கோம்; தைரியமாக இருங்கள்- அஜித்குமாரின் குடும்பத்திற்கு எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் ஆறுதல்

திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…

3 hours ago

என்னால ஐநூறு ஆயிரத்துக்குலாம் நடிக்க முடியாது- இன்ஸ்டா பிரபலம் திவாகர் ஆதங்கம்!

சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…

4 hours ago

பட்டியலின இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீஸார்; 6 மாதம் முன்பு நடந்த சிசிடிவி வீடியோ!

திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்…

5 hours ago

This website uses cookies.