இந்தியாவிலேயே ஆணவக்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது என மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளார் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: பெரியாரின் நினைவுநாளை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார்.
அப்போது பேசிய கே.பாலகிருஷ்ணன், “பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டில் ஆட்சி செலுத்தி வருகின்றது. ஆனாலும் கூட இந்தியாவிலேயே ஆணவக்கொலைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தலித் மக்களுக்கு தினந்தோறும் கொடுமைகள் இழைக்கப்படுகிறது.
சாதிய உணர்வுகளும், சாதிய அணிசேர்க்கையும் கொடிகட்டிப் பறக்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கடந்த அரைநூற்றாண்டு கால ஆட்சியில் பெரியாரியக் கொள்கைகள் படிப்படியாக கைவிடப்பட்டு உள்ளன என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
பெரியார் நினைவுநாளில், அவர் தூக்கிப் பிடித்த சமூக ஒற்றுமை, சாதிகள் அற்ற சமூகம் வேண்டும். பெரியாரின் திசை வழியில் பயணிக்க வேண்டும் என அனைவரையும் அழைக்கிறோம். பெரியாரின் கொள்கைகளை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மனைவி ஊரில் வாழ்ந்த கணவர்.. தட்டிக்கேட்க வந்த உறவினர்கள்.. பாய்ந்த கத்தி.. சிவகாசியில் அதிர்ச்சி!
மேலும், ஆளும் திமுக உடன் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இவ்வாறு பேசி இருப்பது கூட்டணியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் போது காங்கிரஸும், ஆதவ் அர்ஜுனா விவகாரத்தில் விசிகவும், திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை மறைமுகமாக எடுத்ததாக விமர்சனங்கள் வந்ததும் குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.