Categories: தமிழகம்

பூட்டியிருக்கும் வீடுகளுக்கு மட்டுமே குறி…. பகலில் உலா வரும் கேடி பெண்கள் : பகீர் சம்பவம்!!

கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பகுதியில் வசிப்பவர் சதாசிவம். ஆவின்பால் முகவரான இவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் தனது பணிகளுக்காக வெளியே சென்றுள்ளார்.

அவரது மனைவி மற்றும் மகன்களும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால் கடைசியாக வீட்டில் இருந்து வெளியே சென்ற சதாசிவத்தின் மகன் வீட்டை பூட்டி வழக்கம்போல் வீட்டின் முன்புள்ள பெட்டியில் சாவியை வைத்துவிட்டு அவரும் வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் சதாசிவம் மாலை 3 மணிக்கு வீட்டிற்கு வந்தவர் ஆவின் நிறுவனத்திற்கு கொடுப்பதற்கு வைத்திருந்த ரூ 5 ஆயிரம் பணத்தை எடுக்க பீரோவை திறந்துள்ளார்.

அப்போது அவர் வைத்த இடத்தில் பணம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டுள்ளார். யாரும் எடுக்கவில்லை என்றதும், பீரோவை சோதித்து பார்த்ததில் லாக்கரில் வைத்திருந்த 15 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்ததையடுத்து கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

சதாசிவத்தின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்துள்ளார்கள். அதில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் திருச்சி பேருந்துகள் நிற்க்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு பெண்களை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து தனிதனியே விசாரித்ததில் இருவரும் முன்னுக்குபின் முரனான தகவல் அளித்துள்ளனர்.

மேலும் போலிசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் ஒருவர் பெயர் ரமணி, மற்றொருவர் வினையா என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மீது கரூர், காங்கேயம் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

போலிசாரின் விசாரணையில் சதாசிவத்தின் வீட்டில் நகையை கொள்ளையடித்ததும், கொள்ளையடிப்பதற்க்காக தனியார் கால்டாக்ஸி மூலம் கோவை வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சதாசிவத்தின் வீட்டில் ரமணி நகையை திருடியதும். திருடிய நகைகளை வினயா, ரமணி இருவரும் சரிபாதியாக பிரித்து எடுத்துள்ளனர். இதில் வினயா 14 கிராம் நகையை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பிரபல நடைகடையில் தனது அடையாள அட்டையை காண்பித்து விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து நகைகடைகாரர்களிடம் விற்கப்பட்ட 14 கிராம் நகை உட்பட சதாசிவம் வீட்டில் திருட்டுபோன 15 சவரன் தங்க நகைகளையும் கைப்பற்றிய சிங்கநல்லூர் போலீசார் இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

12 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

13 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

14 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

15 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

15 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

16 hours ago

This website uses cookies.