தமிழகம்

இதுக்கு முன்னால 5 பேரு.. ஆனா 3 புருஷன் தான்.. கரூர் கல்யாண ராணி சிக்கியது எப்படி?

கரூரில், 3வது திருமணம் செய்த நபரால் கல்யாண ராணி ரேணுகா எவ்வாறு கைது செய்யப்பட்டார் என்பது குறித்து பார்க்கலாம்.

கரூர்: கரூர் மாவட்டம், புஞ்சைக்காளக்குறிச்சி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (30). இவர் கொசுவலை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவருக்கும், கோவை மாவட்டம், ராமநாதபுரத்தை சேர்ந்த ரேணுகா (36) என்பவருக்கும், கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கரூர் மண்மங்கலத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், ரேணுகாவுக்கு ஏற்கனவே புதுக்கோட்டையைச் சேர்ந்த மெய்யர் மற்றும் கோவையைச் சேர்ந்த லோகநாதன் ஆகியோருடன் திருமணம் நடந்திருப்பது ரமேஷுக்கு, அவரது செல்போன் அழைப்பு மூலம் தெரிய வந்துள்ளது. எனவே, இது குறித்து ரேணுகாவிடம் ரமேஷ் கேட்டுள்ளார்.

அப்போது ரேணுகா, நான் உன்னை விட்டுச் செல்ல வேண்டுமானால் 20 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 20 பவுன் நகை கேட்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து, இது குறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த ரேணுகா, தப்பிச் செல்வதற்காக கரூர் பேரூந்து நிலையம் வந்துள்ளார்.

இந்த தகவல் அறிந்ததும் கரூர் அனைத்து மகளிர் போலீசார், பேருந்து நிலையத்துக்கு விரைந்து சென்று ரேணுகாவைக் கைது செய்து விசாரித்து உள்ளனர். அப்போது, ரேணுகாவின் முதல் கணவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ரமேஷின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த கோவையை சேர்ந்த தரகர்களான ஜெகநாதன், ரோஷினி மற்றும் பழனிக்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகர் சிவராஜ்குமார் எப்படி இருக்கிறார்…அமெரிக்காவில் இருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!

மேலும், இந்த இரு கணவர்களுக்கு இடையே 3 பேருடன் ரேணுகா உறவில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், கணவர் 3 பேரை தவிர்த்து வேறு யாருடனும் ரேணுகாவுக்கு திருமணம் நடந்ததா, வரன் தேடும் இளைஞர்களைக் குறி வைத்து ஏமாற்றி பணம் பறிப்பதை வழக்கமாக கொண்டுள்ளாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.