சோளிங்கரில் கட்டுமான பணியின் போது சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பேருந்து நிலையம் அருகே வாசவி திருமண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தின் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. திருமண மண்டபத்தை சுற்றி உள்ள சுவற்றை இடித்துவிட்டு புதியதாக சுற்றுச்சுவர் கட்டும் பணி நடக்கிறது.
இந்த பணியின் போது சுவற்றை இடிக்கும் போது திடீரென சுவர் அடியோடு அதிகளவில் பெயர்ந்து கீழே விழுந்ததில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி திருவள்ளூர் மாவட்டம் மகான் காளிகாபுரத்தைச் சேர்ந்த விஷ்வா என்கிற விசுவநாதன் (19), சோளிங்கர் மேல் வன்னியர் தெருவை சேர்ந்த வேலு (40) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் சோளிங்கர் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோளிங்கர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.