திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 3ந் தேதி கடலூரை அடுத்த குள்ளஞ்சாவடி அருகே குள்ளஞ்சாவடியில் உள்ள திருமண மண்டபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் மண்டபத்தில் பரிமாறப்பட்ட காலை உணவை திருமண விழாவுக்கு வந்த இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் உணவு சாப்பிட்டனர். அதேபோல், புலியூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திருவேங்கடம் (65) என்பவரும் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
மேலும் படிக்க: தனி அறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்… கோவை மத்திய சிறையில் மனித உரிமை மீறல் ; வழக்கறிஞர் பகீர் குற்றச்சாட்டு
வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் உடல் சோர்வுடன் காணப்பட்ட அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இதனை தொடர்ந்து, திருமண நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்ட புலியூரை சேர்ந்த உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் புலியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இவர்களில் சிலர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியிலும், புதுச்சேரி தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவேங்கடம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், புலியூர் காட்டுசாகை தெற்கு தெருவை சேர்ந்த வைத்தியலிங்கம் மகன் களிகானம் என்கிற நாராயணசாமி (55) நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தனர். ம இது பற்றி குள்ளஞ்சாவடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நிகழ்ச்சியில் காலை உணவு சாப்பிட்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.