தமிழகம்

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் வெற்றிக்கரமாக நடத்தினார்.

அப்போது அவர் பேசிய பேச்சு சினிமாத்தனமாக இருந்ததாக விமர்சனம் எழுந்தது. இருப்பினும் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என அவர் பேசியது இன்றளவும் எதிரொலிக்கிறது.

இதையடுத்து மதுரையில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினை, அங்கிள் என குறிப்பிட்டு பேசியது பெரும் சர்ச்சையானது.

என்னதான் எதிரியாக இருந்தாலும், மரியாதை இருக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் சாடின. மரியாதையான சொற்களை மரியாதையான இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற விமர்சனமும் எழுந்தது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விஜய், நாகையில் பேசும் போது, மரியாதையாக கூப்பிட்டால் பிடிக்க மாட்டிங்குது என்பதால் சிஎம் சார் என பேசினார். விஜய் பேசிய இதுவும் சினிமாத்தனமாக உள்ளது. பஞ்ச் டயலாக் பேசுவது போன்று உள்ளது என மீண்டும் விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் நடைபெற்ற பிரச்சார நிகழ்ச்சியில் நடிகர் விஜய்யின் உரையில் மாற்றம் காணப்பட்டதாக அரசியல் விமர்சகர் சுமந்த்ராமன் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது: “விஜய் வேகமாக கற்றுக் கொண்டுள்ளார். இன்று அவரது பேச்சு சுருக்கமாகவும் நேரடியாகவும் இருந்தது. சினிமா பாணியில் பஞ்ச் வசனம் பேசாமல், விஷயத்திற்கு நேரடியாகச் சென்றுவிட்டார்,” என பாராட்டினார்.

இந்த பதிவு குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அதில் சிலர், “விஜய் இன்னும் தேர்தலில் கூட நிற்கவில்லை. அப்படி இருக்கையில் ‘மீண்டும் ஆட்சிக்கு வருவோம்’ என்று பேசியது அவசியமா? இன்னும் பேச்சு முறை மேம்பட வேண்டும்,” என விமர்சித்துள்ளனர்.

இவ்வாறு, விஜய்யின் அரசியல் மேடைப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

உங்க ஆசை நிராசையாக போகும்… இபிஎஸ்க்கு சாபம் விட்ட திருமாவளவன்..என்ன நடந்தது?

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வி.சி.க. தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியைப் பற்றிய எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “திமுக…

2 weeks ago

This website uses cookies.