மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நாட்டு வெடிகள் தயாரிப்பின் போது வெடி விபத்து நான்கு பேர் சம்பவ இடத்தில் உடல் சிதறி பலியாகினர்.
மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே தில்லையாடி காளியம்மன் கோயில் தெருவில் அப்பகுதியை சேர்ந்த ராமதாஸ் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் உள்ளது. தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
தயாரிப்பின் போது திடீரென்று தீப்பற்றியதால் தயாரித்து வைக்கப்பட்டிருந்த வெடிகள் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் தொழிலாளர்கள் நான்கு பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். உடலின் பாகங்களை அடையாளம் காண முடியாதபடி பல்வேறு இடங்களில் சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு உடல் பாகங்கள் சிதறியுள்ளன.
இதன் காரணமாக அப்பகுதியில் அருகில் இருந்த வீடுகள் குலுங்கின. புகைமூட்டம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து வேறு யாராவது இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என்பது குறித்து சோதனை நடைபெற்று வருகிறது. பொறையார் போலீசார் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.