மயிலாடுதுறை : சீர்காழி அருகே போலீசாருக்கு பயந்து பாக்கெட் சாராய விற்பனையை நிறுத்த மறுத்த வியாபாரியின் பேச்சு அடங்கிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதி மற்றும் சீர்காழியை சுற்றியுள்ள ஓதவந்தான்குடி, திருப்புங்கூர், மாதிரவேலூர், பனங்காட்டான்குடி ஆகிய இடங்களில் புதுச்சேரி மாநில சாராயம் பாண்டி ஐஸ் என்கிற பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கால நேரமின்றி இருபத்தி நான்கு மணி நேரமும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் இந்த விஷச் சாராயத்தை ஏழை கூலித் தொழிலாளர்கள் அருந்தி வருகின்றனர். இதனால் சீர்காழி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அடுத்தடுத்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது.இதனால் குடும்பத்தின் தலைவரை இழந்து பல குடும்பங்கள் ஆதரவின்றி சோகத்தில் தவித்து வருகின்றனர்.
சீர்காழி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் கொள்ளிடம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் தொடர்ந்து சாராய விற்பனை செய்பவர்கள் தலைமுறை தலைமுறையாக செய்து வரும் ஆட்களாகவே உள்ளனர். இது போன்ற ஒருசிலரை காவல்துறை கலை எடுத்தாலே இப்பகுதியில் விஷச் சாராயம் விற்பனை குறைவதோடு, பல குடும்பங்களில் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் ஓதவந்தான்குடி கிராமத்தில் சாராயத்தை குடித்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்த போது விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் சாராய வியாபாரியை சுற்றி வளைத்து சாராய விற்பனையை கைவிட வலியுறுத்தினர்.
சாராய விற்பனையாளர் கலியன், நான் காவல்துறை வரும் போது அவர்களிடம் சொல்லிவிட்டு அதன் பின்னர் நிறுத்துகிறேன் என கூறும் வீடியோவும், தொடர்ந்து வீட்டில் வைத்தே பாக்கெட் சாராயம் விற்பனை செய்யும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஒரு சில காவல் துறை அதிகாரிகளை பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து சாராய விற்பனையை செய்து வருகின்றனர். ஒருவரை கைது செய்தால் மற்றவர் அதே இடத்தில் விற்பனை செய்வதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. எனவே விஷச் சாராய விற்பனையை அடியோடு நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகமும் அரசும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீர்காழி சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.