மயிலாடுதுறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மற்றொரு பிரிவினர் வாழும் பகுதிக்கு ஊர்வலமாக செல்ல முயன்றதால் பரபரப்பு நிலவியது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்த அஜித்குமார். இவரது உறவினர் சரவணன் ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது, மர்மகும்பலால் அஜித் குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வெட்டு காயங்களுடன் சரவணன் உயிர்த்தப்பினார்.
படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் கடந்த 2022 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் கண்ணன் கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் படுகொலை செய்யப்பட்ட அஜித்குமார் உறவினர்கள் மயிலாடுதுறை பேருந்து நிலையம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி மீனா, மாவட்ட ஆட்சியர் திரு மகாபாரதி ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மற்றொரு பிரிவு மக்கள் வசிக்கும் பகுதிக்கு ஊர்வலமாக சென்றனர்.
இதன் காரணமாக இரு பிரிவினர் இடையே ஜாதி மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். மயிலாடுதுறையில் தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறையில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து, கடைகளை மூடச் சொல்லி பாதிக்கப்பட்டவர்கள் தகராறு செய்ததால் கடைகள் அடைக்கப்பட்டு பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே தாங்கள் போராட்டங்களை கைவிட போவதாக கூறி வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.