சென்னையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நகைகளை திருடிய எம்பிஏ பட்டதாரியை கைது செய்த போலீசார், மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.
சென்னை: சென்னை அடையார் இந்திரா நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவரது மகன் ஆனந்த முரளியின் மகளுக்கு, நீலாங்கரை வெட்டுவாங்கேணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திருமணம் நடைபெற்று உள்ளது.
இதற்காக, டிசம்பர் 4ஆம் தேதி அன்று காலை மணமேடைக்குச் செல்வதற்கு முன்பு, மணமகளுக்கான தங்க, வைர அணிகலன்களை அணிவதற்காக, மண்டபத்தில் இருந்த அறைக்குச் சென்றுளார். அப்போது, அங்கு இருந்த இரண்டு வைர நெக்லஸ்கள், வைரத் தோடுகள் மற்றும் தங்க நகைகள் காணாமல் போயுள்ளது.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து ஆனந்த முரளி, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் திருமண மண்டபத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், திருமணத்திற்கு வருவது போன்றே நல்லவிதமாக ஆடை அணிந்து வந்த 2 பேர், அறைக்குள் புகுந்து நகையை திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: இந்துக்கள் மீது தீராத வன்மம்.. திமுக அரசு மீது வானதி சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு!
இதனையடுத்து, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள், இருசக்கர வாகன பதிவெண் மற்றும் செல்போன் சிக்னல் ஆகியவற்றை வைத்து கொள்ளையர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில், ராம்ஜி நகருக்குச் சென்ற நீலாங்கரை தனிப்படை போலீசார், அங்கு பதுங்கி இருந்த சுதர்சன் (31) என்பவரை கைது செய்தனர்.
ஆனால், மற்றொரு நபரான கார்த்திக் (23), போலீசாரைக் கண்டதும் தப்பியோடிய நிலையில், அவத்ரை தீவிரமாக தேடி வருகின்றனர். பின்னர் சுதர்சனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் எம்பிஏ பட்டதாரி என்பதும், பத்தாண்டுகளுக்கு மேலாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
மேலும், இவர் கிழக்கு கடற்கரை சாலையில் தங்கி, அங்கு உள்ள ரிசார்ட்கள், திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள் ஆகியவற்றை நோட்டமிட்டு கைவரிசை காட்டியதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, சுதர்சனிடம் இருந்து 10.5 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் திருடப்பட்ட மொத்த நகைகளின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் ஆகும்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.