அப்பா திரைப்படத்திற்கு பணம் கொடுத்துதான் டேக்ஸ் ஃப்ரீ வாங்கினேன் என திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்..
சேலத்தில் தனியார் உணவகம் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- ரிவ்யூ சொல்வது அவரவர் தனிப்பட்ட கருத்து, யார் ரிவ்யூ சொன்னாலும் போர்தொழில் போன்ற தரமான படங்கள் கண்டிப்பாக ஓடும் என்ற அவர், செல்போன் வைத்துள்ள அனைவரும் இன்று ரிவ்யூ சொல்ல ஆரம்பித்து விட்டனர், என்றார்.
நடிகர் விஷால் தனது திரைப்படத்திற்கு பணம் கொடுத்து சென்சார் போர்டில் சான்றிதழ் வாங்கிய விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “சென்சார்போர்டில் இதுவரை தான் பணம் கொடுத்தது இல்லை. அப்பா திரைப்படத்திற்கு டேக்ஸ் ஃப்ரீ வாங்க பணம் கொடுத்தேன். அரசே எடுக்க வேண்டிய படத்தை தான் செலவழித்து எடுத்தும், பணம் கொடுத்து டேக்ஸ் ஃப்ரீ வாங்கியது வருத்தம் அளிக்கிறது, என வேதனை தெரிவித்தார்.
மேலும், தற்போது செல்போனில் கூட படம் எடுக்கலாம் என ஆகிவிட்டதால், ஆண்டுக்கு சுமார் 1000 திரைப்படங்கள் வெளியிட முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். காவிரிக்காக நிச்சயம் குரல் கொடுப்பேன் என்ற அவர், தனி மனிதனாக இதில் ஒன்றுமே செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.