கோவை : தீயில் உடல் கருகிய நிலையில் வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அடுத்த கோவில்பாளையம் அருகே உள்ள வெள்ளானைப்பட்டி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சோமசுந்தரம் இவரது மகன் சரவணகுமார் (வயது 24). திருமணமாகாதவர். மெக்கானிக்.
மேலும் இவர் மொபைல் பஞ்சர் வேலை செய்து வந்தார். நேற்று மாலை இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெள்ளானைபட்டியில் உள்ள காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அங்கு சரவணகுமாரின் பைக் நின்றிருந்தது. அங்கிருந்து சற்று தொலைவில் சரவணக்குமார் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். உடனே அவர் இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் தன்னைத் தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது தீ வைத்து கொளுத்தி கொலை செய்தனரா? என கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரவணக்குமார் தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.