கோவை : தீயில் உடல் கருகிய நிலையில் வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை அடுத்த கோவில்பாளையம் அருகே உள்ள வெள்ளானைப்பட்டி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்தவர் சோமசுந்தரம் இவரது மகன் சரவணகுமார் (வயது 24). திருமணமாகாதவர். மெக்கானிக்.
மேலும் இவர் மொபைல் பஞ்சர் வேலை செய்து வந்தார். நேற்று மாலை இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இன்று காலை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வெள்ளானைபட்டியில் உள்ள காட்டுப்பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார்.
அங்கு சரவணகுமாரின் பைக் நின்றிருந்தது. அங்கிருந்து சற்று தொலைவில் சரவணக்குமார் தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். உடனே அவர் இதுகுறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் தன்னைத் தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது தீ வைத்து கொளுத்தி கொலை செய்தனரா? என கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சரவணக்குமார் தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.