நெல்லை ; நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ஆபத்து மிகுந்த மருத்துவ கழிவுகள் எடுக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது
நெல்லை பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் அமைந்துள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் உள்நோயாளி மற்றும் வெளி நோயாளிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாள்தோறும் சிகிச்சை பெற்று வரும் சூழ்நிலையில்,
இம்மருத்துவமனையின் வளாகத்தில் சுகாதாரமற்ற முறையில் மருத்துவ கழிவுகளை எரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. நெல்லையின் மாநகர் பகுதியில் அமைந்துள்ளது.
இந்த பல்நோக்கு மருத்துவமனையில் பலதரப்பட்ட நோய்களுக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இங்கு தினம்தோறும் அகற்றப்படும் மருத்துவ கழிவுகளை சட்ட விதிகளுக்கு உட்பட்டு முறையாக அப்புறப்படுத்தாமல், பல்நோக்கு மருத்துவமனையின் வளாகத்திற்கு பின்புறம் திறந்த வெளியில் எரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ கழிவுகளை அகற்றுவதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது.
அதன்படி, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட நிறுவனம் மருத்துவக் கழிவுகளை கிலோ 52 ரூபாய் வீதம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள தனியார் கிடங்கில் வைத்து எரித்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் தற்போது அந்த விதி மீறப்பட்டு அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே கழிவுகள் எரிக்கப்பட்டு வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ச்சியாக இதுபோன்று திருநெல்வேலி பகுதியில் மருத்துவக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதும் பொது இடத்தில் எரிக்கப்படுவதும் நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.