என் மீது எவ்வளவு வழக்குகள் போட்டாலும் எவ்வளவு பிரச்சனைகளை சிக்க வைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சொத்துவரி, மின்சார கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி, அதை கண்டித்தும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அதை கண்டித்தும் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது :- அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை இந்தியாவில் முதன்மை மாநிலமாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவிலேயே தமிழக சுகாதாரத்துறை தத்தளித்து வருகிறது.
ஐசியூவில் தமிழக சுகாதாரத்துறை உள்ளது. அரசு மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் இல்லாமல் வெளி மார்க்கெட்டில் வாங்க என்ஓசி கொடுத்து வருகிறார்கள். என் மீது எவ்வளவு வழக்குகள் போட்டாலும் எவ்வளவு பிரச்சனைகளை சிக்க வைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, என தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.