திருவண்ணாமலை: செங்கம் அருகே குடியிருந்த குடிசை வீடு எரிந்ததால் வெட்ட வெளியில் சமைத்து உண்ணும் கூலித்தொழிலாளி வீடு கட்டித்தர கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ராவந்தவாடி பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கோபி. இவர் தனது மனைவி குழந்தைகளுடன் சிறிய குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் தான் சம்பாதிக்கும் பணம் வயிற்றைக்கே சரியாக உள்ளதால் தனக்கென வீடு கட்ட பணம் இல்லாமல் நெடுங்காலமாக குடிசை வீட்டில் இருந்து வருகிறார்
இந்நிலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் தங்கியிருந்த குடிசை வீடு எரிந்து சாம்பலாகிப் போனதால் வீட்டில் இருந்த தட்டுமுட்டு சாமான்கள் உள்பட தீயில் கருகியதால் சாப்பாட்டிற்கே வழி இல்லாமல் தவித்த அக்குடும்பத்திற்க்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிகண்டன் அரிசி மளிகை பொருட்கள் உள்பட வழங்கினார்.
தற்போது வீடு இல்லாமல் தெருவில் சமைத்து உண்ணும் அவல நிலைக்கு தள்ளப்பட்ட கோபி தனக்கென பசுமை வீடு ஒன்று அரசு வழங்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.