தஞ்சை : மாணவர்கள் பொதுத்தேர்வினை, உங்கள் திருப்திக்காக எழுதுங்கள் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே தோழகிரிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சீர்மிகு அங்கன்வாடி மையம் மற்றும் நூலகத்தினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கடந்த கூட்ட தொடரில் 27 அறிவிப்புகள் கொடுத்திருந்தோம், அதில் 15 அறிவிப்புகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. மீதி அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கூட்ட தொடரில் புதிய அறிவிப்புகள் வரும். 35% முதல் 50% சதவீதம் வரை பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்திற்குள் பாட திட்டங்களை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும். பின்னர் திட்டமிட்டபடி பொது தேர்வு நடைபெறும். மாணவர்கள் பயப்படாமல் உங்கள் மனநிலைக்கு ஏற்றவாறு தேர்வினை எழுத வேண்டும். உங்களுக்கு என்று ஒரு நாற்காலி காத்திருக்கிறது. பெற்றோர்களுக்காக படிக்காமல், உங்களுக்கு என்ன வருகிறதோ, உங்கள் என்று என்ன தனித்திறமையை இருக்கிறதோ அதை நோக்கி உங்கள் பயணம் அமைய வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியாக படியுங்கள், உங்கள் திருப்திக்காக தேர்வினை எழுதுங்கள் என்று அவர் தெரிவித்தார்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.