மாப்ள சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு முயற்சித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் தஞ்சாவூர் பாரம்பரிய கைவினை கலை பொருட்களின் கண்காட்சியினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த புவிசார் குறியீடு பெற்ற பொருள்களின் கண்காட்சி மற்றும் விற்பனை மையத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தொடங்கி வைத்தார் .
பின்னர் கண்காட்சியில் வைத்திருக்கக்கூடிய பொருட்களை பற்றி அவர் கேட்டறிந்தார். மேலும், அங்கு வைத்திருந்த நாதஸ்வர கடையில் நாதஸ்வரம் வாசித்துப் பார்த்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி;- இந்த நாள் பெருமைக்குரிய நாளாக பார்க்கப்படுகிறது. தஞ்சாவூரின் விற்பனை கூடத்தை நான் சென்னையில் திறந்து வைத்திருக்கின்றேன். இந்த கைவினை கலைப் பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும்.
பொதுமக்கள் இதை பார்வையிட்டு பாரம்பரியத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த கண்காட்சியை சர்வதேச அளவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த புவிசார் குறியீடு பெற்ற 10 வகையான பொருட்கள் இங்க இடம் பெற்றிருக்கிறது. இன்னும் 24 வகையான பாரம்பரிய பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு விண்ணப்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மாப்ள சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு முயற்சித்து வருகிறோம். பள்ளிக்கல்வித்துறை சார்பில் புத்தக கண்காட்சியில் இந்த பாரம்பரிய புவிசார் குறியீடு பெற்ற பொருட்களையும் காட்சிபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.
பின்னர் பேட்டியளித்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ; தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 10 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்றிருக்கிறது. அந்த அனைத்து பொருட்களும் இன்று இங்கே கண்காட்சிகளுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் இந்த கண்காட்சியை மற்ற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் மற்றும் சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.