விண்ணப்பம் கொடுத்த 11 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கும்… அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
பழனி அருகே தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பூலாம்பட்டி புளியம்பட்டி தொப்பம்பட்டி கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி சர்க்கரை கரும்பு 1000 ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில் கலைஞர் உரிமைத்தொகை ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு வழங்கி வருவதாகவும் அதன் பின்னர் விண்ணப்பித்த ஏழு லட்சத்து 20 ஆயிரம் பேர் கலைஞர் உரிமைத்தொகை மாதந்தோறும் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர் கலைஞர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பித்துள்ள 11 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு விரைவில் தகுதியுள்ள அவர்களுக்கு வழங்குவதற்காக 8 தாசில்தார் 101 துணை தாசில்தார்கள் முதல்வர் நியமித்துள்ளதாகவும் இதன் மூலம் விரைவில் 11 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க உள்ளதாகவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி ஊராட்சி மன்ற தலைவர்கள் சுப்பிரமணி ராமராஜ் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.