எங்களை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் உள்ளார்கள் என்றும், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என தேர்தல் பிரச்சாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் இண்டூரில் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற திமுக பொதுக்கூடத்தில் திமுக கழக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று தருமபுரி நாடாளுமன்ற திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணியை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற திமுக பரப்புரையாற்றினார்.
மேலும் படிக்க: அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு.. கோவை, திருப்பூரில் பரபரப்பு…!!!
அப்போது அவர் பேசியதாவது : நமக்கும் டெல்லிக்கும்தான் போட்டி. மோடி சொல்கிறார் நான் ஆட்சிக்கு வந்தால் திமுகவை துடைத்து எறிவேன். மூட்டை பூச்சி போல நசுக்கி கொன்னு எரிந்து விடுவேன் என கூறினார். இது முடியாத காரியம். ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு பேசலாமா..?
நாங்கள் என்ன உங்க வீட்டு குப்பையா..? எங்களை அழிக்கணும்னு நினைத்தவர்கள் எல்லாம் தற்போது குலோசாகி விட்டார்கள், என அவர்பேசினார். இக்கூட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் பழநியப்பன், எம்பி செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.