திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆதிதிராவிடர் தங்கும் விடுதியை தமிழக ஆதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது விடுதியில் வார்டன் இல்லாததால் அமைச்சர் அதிருப்தி அடைந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலையில் பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை அதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அங்கு மாணவர்களுக்கு உணவு செய்யப்படும் சமையல் அறையை ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு பல நாட்கள் உணவு செய்யாமல் இருந்ததால் அந்த அறை இருண்ட குகை போல் காட்சி அளித்தது.
பின்னர் சமையலர் திருகுமரனை அழைத்து வார்டன் இருக்கிறாரா இல்லையா என்று கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த அமைச்சர் சமையலறை தனி அறையில் அழைத்து சென்று விசாரித்தார்.
பின்னர் வெளியே வந்த அமைச்சர் பேசும்போது, தவறு செய்யும் பட்சத்தில் யாராக இருந்தாலும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.