இனிவரும் காலங்களில் மதுரையில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை: மதுரையில் நேற்று (அக்.25) பிற்பகல் முதல் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கண்மாய் பெருகி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியரிடம் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரவும் அவர் அறிவுறுத்தினார்.
இதன்படி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “மதுரை மாவட்டத்திலே பெய்த மழையின் காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடிய சேதங்களை உடனடியாக பார்வையிட முதலமைச்சர் ஸ்டாலின், உத்தரவு பிறப்பித்தார். நான் அதற்கு முன்னதாகவே மதுரை மாவட்ட ஆட்சியர் உடன் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.
இப்போது பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. பந்தல்குடி கால்வாய் தண்ணீர் என்பது, வழக்கத்தை விட அதிகமாக வருவதன் காரணத்தால், அந்த தண்ணீர் வைகை ஆற்றில் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 3 டிரான்ஸ்பார்மர்களை அகற்றும் பணியும் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக, விவசாயத்திற்காக உள்ள கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பி, மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது.
எப்போதும் உள்ள நீர்வரத்து, கண்மாய் தண்ணீர் வரக்கூடிய தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால், குடியிருப்பு பகுதியில் ஒரு சில இடங்களில் கால் பகுதியில் தண்ணீர் சென்றுள்ளது. காலைக்குள் தண்ணீர் அகற்றப்படும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. கனமழை வந்தாலும் இனி தாக்குப் பிடிக்கும் அளவில் பணிகள் நடைபெற்று வருகிறது. செல்லூர், பந்தடி அல் அமீன் ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : கால் மணிநேரத்தில் மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை.. வரலாற்று மழைப்பதிவு!
ஆனால், முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே பார்த்தாச்சு. எதிர்பார்த்த சேதாரம் இல்லை, பெரிய சேதாரம் இல்லை. ஆனாலும் கூட, இனிவரும் காலங்களில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.