தமிழகம்

எதிர்பார்த்த சேதாரம் இல்லை.. மதுரை மழை பாதிப்பு குறித்து அமைச்சர் பதில்

இனிவரும் காலங்களில் மதுரையில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

மதுரை: மதுரையில் நேற்று (அக்.25) பிற்பகல் முதல் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கண்மாய் பெருகி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் மூர்த்தி மற்றும் ஆட்சியரிடம் கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், தேவையான ஏற்பாடுகளைச் செய்து தரவும் அவர் அறிவுறுத்தினார்.

இதன்படி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, வருவாய் அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, “மதுரை மாவட்டத்திலே பெய்த மழையின் காரணமாக ஏற்பட்டிருக்கக் கூடிய சேதங்களை உடனடியாக பார்வையிட முதலமைச்சர் ஸ்டாலின், உத்தரவு பிறப்பித்தார். நான் அதற்கு முன்னதாகவே மதுரை மாவட்ட ஆட்சியர் உடன் ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.

இப்போது பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. பந்தல்குடி கால்வாய் தண்ணீர் என்பது, வழக்கத்தை விட அதிகமாக வருவதன் காரணத்தால், அந்த தண்ணீர் வைகை ஆற்றில் செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 3 டிரான்ஸ்பார்மர்களை அகற்றும் பணியும் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே பெய்த மழையின் காரணமாக, விவசாயத்திற்காக உள்ள கண்மாய்கள் முழுவதுமாக நிரம்பி, மறுகால் பாய்ந்து கொண்டிருக்கிறது.

எப்போதும் உள்ள நீர்வரத்து, கண்மாய் தண்ணீர் வரக்கூடிய தண்ணீர் அளவு அதிகமாக உள்ளதால், குடியிருப்பு பகுதியில் ஒரு சில இடங்களில் கால் பகுதியில் தண்ணீர் சென்றுள்ளது. காலைக்குள் தண்ணீர் அகற்றப்படும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. கனமழை வந்தாலும் இனி தாக்குப் பிடிக்கும் அளவில் பணிகள் நடைபெற்று வருகிறது. செல்லூர், பந்தடி அல் அமீன் ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : கால் மணிநேரத்தில் மதுரையில் கொட்டித் தீர்த்த கனமழை.. வரலாற்று மழைப்பதிவு!

ஆனால், முன்னெச்சரிக்கையாக ஏற்கனவே பார்த்தாச்சு. எதிர்பார்த்த சேதாரம் இல்லை, பெரிய சேதாரம் இல்லை. ஆனாலும் கூட, இனிவரும் காலங்களில் மழை பெய்தால் எந்த பாதிப்பும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

Hariharasudhan R

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

14 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

16 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

16 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

17 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

17 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

18 hours ago

This website uses cookies.