ஈஷா சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் ஈரோட்டில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், அதில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து பங்கேற்கும் கிராமத்து இளைஞர்களை தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து கூறினார்.
விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களிடம் புத்துணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை ஈஷா அவுட்ரீச் அமைப்பு 2004-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது.
முதல்கட்ட போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் நாளை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அதில் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் கொமரப்பாளையத்தில் உள்ள எக்ஸல் கல்லூரியில் மண்டல அளவிலான போட்டிகள் நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கணைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், கிளெஸ்டர் அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ஈரோட்டு கிராமத்து இளைஞர்களை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் தனது இல்லத்திற்கு இன்று (செப்.9) நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வாலிபால் போட்டியில் முதலிடம் பிடித்த ஓரிச்சேரி புதூர் அணி வீரர்களும், பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் முதலிடம் பிடித்த பெருமாள் பாளையம் அணி வீராங்கணைகளும் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர். அமைச்சர் அவர்கள் வீரர்களுடன் கலந்துரையாடும் போது மண்டல அளவிலான போட்டியிலும் ஈரோட்டு அணிகள் வெற்றி வாகை சூட வேண்டும் என்று வாழ்த்தினார்.
எக்ஸல் கல்லூரியில் நாளை நடைபெறும் விளையாட்டு போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக நேரில் கண்டு களிக்கலாம். சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பொழுதுப் போக்கு விளையாட்டு போட்டிகள் மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.