கடலூர் அருகே அமைச்சர் பொன்முடி சென்ற கார் மோதிய விபத்தில் பைக்கில் சென்ற இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடலூரில் தேரடி வீதியில் நடைபெற்ற திமுக ஆட்சியின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுகூட்டத்தில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். பின்னர், மீண்டும் நெல்லிக்குப்பம் வழியாக விழுப்புரம் சென்றபோது, அவருடைய கார் சாலையில் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகன ஒட்டி ஜோதி என்பவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, உடனடியாக பாதுகாப்பு காவல்துறையினர் விபத்தில் சிக்கியவரை மீட்டு காவல்துறை வாகனத்திலேயே தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அமைச்சர் பொன்முடி விழுப்புரம் புறப்பட்டு சென்றார்.
தற்போது அவரது நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படும் நிலையில், அமைச்சரின் கார் இளைஞரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
பயமூட்டும் வில்லன் தமிழ் சினிமா வில்லன் நடிகர்களில் மிகவும் டெரர் ஆன வில்லனாக வலம் வந்தவர் ஆனந்த்ராஜ். குறிப்பாக பெண்களிடம்…
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகிலேயே இந்த தீவிரவாதத்தை தடுக்க வேண்டும், எந்த நாட்டிலும் தீவிரவாதம் இருக்கக்…
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஆட்சிப் பொறுப்பேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் முடிவடைந்து ஐந்தாம்…
வாட்டர்மிலன் ஸ்டார் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் மூலம் தமிழ் இணையவாசிகளின் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டாக்டர் திவாகர். “கஜினி” திரைப்படத்தில் சூர்யா…
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக உள்ளார். அதை தவிர, திமுகவில் அண்மையில் இணைந்து பணியாற்றி வருகிறார்.…
பூந்தமல்லி பகுதியை சேர்ந்த பெண். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கடந்த மாதம் ஆவடி செக்போஸ்ட் அருகே வேலை…
This website uses cookies.