விழுப்புரம் : இலவச சைக்கிள் வழங்கும் விழாவில் சைக்கிள்களின் டயர்களில் காற்று இல்லாததால் வழங்கியது போல் போஸ் கொடுத்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. ஆசிரியர்கள் வால்வு டியூப் இல்லாத டயர்களில் காற்று அடித்த அவலம்.
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி 18 அரசு பள்ளிகளை சார்ந்த 3034 மாணவர்களுக்கு 1 கோடியே 49ஆயிரம் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக அவசர அவசரமாக சைக்கிள் பாகங்களை இணைக்கும் பொழுது டயரில் உள்ள டியூப்பில் வால்வு பொருத்தாமல் அவசரத்தில் விட்டு விட்டனர்.
இது தெரியாமல் சைக்கிளில் காற்று இல்லை என்று நினைத்துக் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் சைக்கிள்களில் காற்று அடித்து வந்தனர். ஆனால் வால்வு டியூப் பொருத்தப்படவில்லை என்று பின்னர் தான் தெரிந்து கொண்டனர்.
பின்னர் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மாணவ மாணவிகளிடம் உரையாடிவிட்டு சைக்கிள் வழங்கும் விழாவில் அமைச்சர் ஒரே இடத்தில் சைக்கிள் வழங்கியது போல் போட்டோவுக்கு போஸ் மட்டும் கொடுக்கப்பட்டது.
எந்த மாணவ மாணவிகளும் சைக்கிளை ஓட்டி செல்ல முடியாமல் சோகமாக அமர்ந்தனர். விழா மேடையில் அமைச்சர் பொன்முடி மாணவர்களிடையே உரையாற்றிய போது மின்சாரம் தடைபட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது பேசிய பொன்முடி தான் ஒரு பேராசிரியராக இருந்த காரணத்தினால் மாணவர்களுக்கு மைக் இல்லாமல் பாடம் நடத்திய அனுபவம் உண்டு என்பதால் மின்சார தடையை பற்றி கவலை இல்லை என கூறி தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் பேசினார் என்பது குறிப்பிடதக்கது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.