கரூர் ; அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூரில் மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவர் சகோதரர் அசோக்குமார், நண்பர்கள் என அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில் நேற்று காலை எட்டு மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை தொடங்கினர்.
சோதனையானது பல்வேறு குழுக்களாக பிரிந்து மத்திய போலீஸ் பாதுகாப்பு படை உதவியுடன் நள்ளிரவு வரை சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை சோதனையை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சரின் சொந்த ஊரான கரூரில் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை வரவேற்று அகில இந்திய சட்ட உரிமைகள் பாதுகாப்பு கழகத்தின் சார்பாக கரூர் ரவுண்டான பகுதியில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட முயன்றனர். இதனை தடுத்த போலீசார் அந்தக் கழகத்தைச் சேர்ந்த மூவரை கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக பூத் முகவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்…
பெயர் சூட்டிய ஆமிர்கான் தமிழின் மிக பிரபலமான நடிகராக வலம் வரும் விஷ்ணு விஷால் “வெண்ணிலா கபடிக் குழு” திரைப்படத்தின்…
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து…
இராமராக ரன்பீர் கபூர்? ரன்பீர் கபூர் இராமராகவும் சாய் பல்லவி சீதாவாகவும் நடித்து வரும் திரைப்படம் “இராமாயணா”. பிரம்மாண்ட பொருட்செலவில்…
வேலூர் மாவட்டத்தில் 23 வயது இளம்பெண் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 6 மாதத்திற்கு பின்னர் வேலையை ராஜினாமா…
LGBTQIA அமைப்பினர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதி கோவை வேளாண் பல்கலைக்…
This website uses cookies.