தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதை துவக்கி வைப்பதற்காக மாநில அமைச்சர்கள் மூன்று பேர் ஹைதராபாத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வந்து இறங்கினர்.
இதையும் படியுங்க: பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!
அமைச்சர்கள் வந்த ஹெலிகாப்டர் தரை இறங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் ஹெலி பேட் அமைக்கப்பட்டிருந்தது.
ஆனால் ஹெலிகாப்டர் பைலட் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலி பேடை தவிர்த்து நேராக நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்திற்கு வந்து அங்கு ஹெலிகாப்டரை இறக்கினார்.
அப்போது ஹெலிகாப்டர் ஏற்படுத்திய காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு மற்றும் ஸ்டால்கள் ஆகியவை காற்றில் பறந்து சரிந்து விழுந்தன.
இந்த சம்பவத்தில் ஒரு சிலர் லேசான காயமடைந்தனர். ஹெலிகாப்டர் இறங்கியபோது பறந்த புழுதி அங்கு வந்திருந்த பொதுமக்களை அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடிக்க வைத்தது.
அதிகாரிகளிடையே சரியான தகவல் பரிமாற்றம் இல்லாத காரணத்தால் தான் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையிறங்க வேண்டிய ஹெலிகாப்டர் நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்திற்கு வந்து சேர்ந்தது என்று கூறப்படுகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.