சென்னை அருகே கஞ்சா போதையில் போலீசாரிடம் பாக்சிங் போட்டு ரகளையில் ஈடுபட்ட சிறுவனின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரவள்ளூர் அருகே உள்ள ஜிகேஎம் காலனி 15வது தெருவைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தார். நேற்று முன்தினம் இரவு, உச்சகட்ட கஞ்சா போதையில் இருந்த அவர், பொதுமக்களை விரட்டியும், மிரட்டியும் ரகளை செய்து கொண்டார். மேலும், அங்கிருந்த மழைநீர் வடிகாலில் விழுந்து, கழிவு நீரில் மூழ்கி வெளியே வந்தார்.
அந்த சமயம், அப்பகுதியில் ரோந்து வந்த பெரவள்ளூர் போலீசார், அந்த சிறுவனை வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அந்த நபரோ, போலீசார் கெட்ட வார்த்தைகளில் திட்டியதுடன், பாக்சிங் வீரரை போல் ஆட்டம் போட்டு, அவர்களை தாக்கினார். இதனைப் பொறுமையாக பார்த்த போலீசார், அந்த சிறுவனை எதுவும் செய்யாமல், அவரது நண்பர்களுடன் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, நேற்று அதிகாலை 1 மணியளவில் சாலையில் மீண்டும் திரிந்த அந்த சிறுவன், அங்கிருந்த மூன்று இருசக்கர வாகனங்களை கட்டையால் அடித்து சேதப்படுத்தினார். இது குறித்து வந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அதீத போதையில் இருந்த அந்த சிறுவனை பிடித்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனிடையே, போலீசாரை தரக்குறைவாக பேசி சரமாரியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.