கோவை காட்டூர் தொட்டராயர் பெருமாள் கோவில் பூசாரியாக பணியாற்றி வருபவர் ரமேஷ். இந்து அறநிலையத் துறைக்கு கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மட்டும் பூசாரியாக பணியாற்றாமல், கோவையில் உள்ள பல்வேறு கோவில்களில் பூஜை செய்து வருவது வழக்கம்.
இந்நிலையில் கண்ணப் நகர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் பெரிய கோவிலிலும் பூஜை செய்து வருவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த கோவிலுக்கு வந்த சிறுவனிடம், கோவிலில் வைத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதில் உள்ள சிலர், காவல் துறை மற்றும் குழந்தைகள் நலத் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். இது குறித்து அங்கு சென்று அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கு உள்ள அந்த கோவில் கமிட்டியினர் கூடி பேசி, அங்கு பூஜை செய்ய வர வேண்டாம் என தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, காட்டூர் தொட்டராயர் பெருமாள் கோவில் பணி செய்து வந்த பூசாரி ரமேஷ் என்பவரை, தற்காலிக பணியிட நீக்கம் செய்து உள்ளனர்.
பக்தர்கள் பயபக்தியுடன் பூஜைகள் செய்து இறைவனின் அருள் பெற கோவிலுக்கு வந்து வழிபாடு நடத்தி செல்லுகின்ற நிலையில், கோவிலில் வைத்து சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பக்தர்களின் நம்பிக்கையையும், கோவிலின் புனிதத்தையும் கெடுக்கும் இது போன்ற கோவில் பூசாரிகள் மீது உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.