தமிழகம்

மலையில் அதிசய புதையல்? கூடாரம் போட்டு தங்கிய கும்பல் : வேலூரில் அடுத்த பயங்கரம்!

வேலூர் அடுத்த அரியூர் அடுத்த சிவநாதபுரம் பகுதியில் 1500 அடி உயரம் உள்ள மலை பகுதி உள்ளது. இந்த மலையின் உச்சியில் மிகவும் பழமை வாய்ந்த ஆதி கைலாசநாதர் சிவன் கோவில் உள்ளது

இந்த கோவிலில் புதையல் இருப்பதாக சுற்றியுள்ள பகுதியினரால் அரசல் புரசலாக பேசப்பட்டு வருவது வாடிக்கையாகயிருந்த நிலையில் அந்த மலையின் மேல் உள்ள பாழடைந்த கோயில் சுவர்களில் உள்ள கற்களை யாரோ உடைப்பதாக அங்கு கூடாரம் அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு அங்கேயே தங்கியிருந்ததும் பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு தகவல் சென்றது.

இதையும் படியுங்க: பட்டுக்கோட்டை பள்ளி மாணவி உயிரிழப்பு.. பெற்றோர் திடீர் வாதம்!

இதனை அடுத்து இளைஞர்கள் மலையின் மேல் சென்று அங்கு கோவிலின் அருகே உள்ள இடத்தில் கூடாரம் அமைத்து மேலும் அக்கோயில் சுவர் அருகே சாரங்களைக் கட்டி அங்கிருந்த மலை கற்களை உடைத்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவர்களை இளைஞர்கள் நெருங்கி வருவதை கண்ட அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். விடாது துரத்திச் சென்ற இளைஞர்கள் அவர்களை அனைவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்

பின்னர் இளைஞர்கள் அவர்களிடம் விசாரித்தபோது அந்த மர்ம நபர்கள் அனைவரும் முன்னுக்குப் பின் முரணாக ஏதேதோ கூறியுள்ளனர்

தொடர்ந்து அந்த இளைஞர்கள் விசாரிக்கையில் சிலர் பாண்டிச்சேரி சேலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என மாறி மாறி பதிலளித்துள்ளனர். தொடர்ந்து விசாரிக்கையில் வேலூர் கந்தனேரி பகுதியை சேர்ந்த ஜோதி என்பவர் தான் தங்களை அழைத்ததாக கூறியுள்ளனர்.

மேலும் அந்த மர்ம நபர்கள் அங்கு கூடாரம் அமைத்து உணவு சமைத்து சாப்பிட்டு அங்கேயே தங்கியிருந்ததும் அவர்களிடம் பாறைகளை உடைக்க வைத்திருந்த மண்வெட்டி, உளி உள்ளிட்ட ஆயுதங்களை கட்டிக் கொண்டு கிளம்பியுள்ளனர்.

மேலும் அப்பகுதிக்கு சிவநாதபுரம் இளைஞர்கள் ஒரு சிலரே சென்றதால் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு அங்கிருந்த மர்ம நபர்கள் சென்று விட்டுள்ளனர். மேலும் அவர்களை தடுத்து நிறுத்தவும் முடியவில்லை

இது குறித்து இந்து அமைப்பினர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஆகியோரிடம் புகார் அளிக்க உள்ளனர் புகாரின் பிறகு அங்கு தங்கி இருந்த மர்ம நபர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? எதற்காக வந்து இங்கு கூடாரம் போட்டு தங்கி இருந்தனர் என்பது முழு விசாரணைக்குப் பிறகு உண்மை தன்மை தெரிய வரும் என போலீசார் மற்றும் வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது

புதையலைத் தேடி மலை மீது ஒரு கும்பல் கூடாரம் அமைத்து தங்கி இருந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!

ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…

12 minutes ago

கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!

விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…

32 minutes ago

‘கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி? கணவருடன் மனக்கசப்பு?!

கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…

52 minutes ago

கங்குவா வசூலை கூட தாண்டாத ரெட்ரோ… சூர்யாவுக்கு வந்த சோதனை!

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…

1 hour ago

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

2 days ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

2 days ago

This website uses cookies.