சங்கராபுரம் அருகே 11 ஆம் வகுப்பு சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயி ஒருவரின் மகள் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.
16 வயதுடைய அந்த மகள் திடீரென காணவில்லையன சங்கராபுரம் காவல் நிலையத்தில் அந்த விவசாயி புகார் அளித்தார். புகாரின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடம் சந்தேகத்தின் பெயரில் சங்கராபுரம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரபு என்பவர் 16 வயதுடைய சிறுமியை மும்பைக்கு கடத்தி சென்றதாக தெரியவந்தது.
சங்கராபுரம் காவல்துறையினர் மும்பை மலாடு பகுதியில் பதுங்கி இருந்த பிரபுவை மடக்கிப் பிடித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் சிறுமியை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.