சங்கராபுரம் அருகே 11 ஆம் வகுப்பு சிறுமியை கடத்திய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயி ஒருவரின் மகள் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.
16 வயதுடைய அந்த மகள் திடீரென காணவில்லையன சங்கராபுரம் காவல் நிலையத்தில் அந்த விவசாயி புகார் அளித்தார். புகாரின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த சில நபர்களிடம் சந்தேகத்தின் பெயரில் சங்கராபுரம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பிரபு என்பவர் 16 வயதுடைய சிறுமியை மும்பைக்கு கடத்தி சென்றதாக தெரியவந்தது.
சங்கராபுரம் காவல்துறையினர் மும்பை மலாடு பகுதியில் பதுங்கி இருந்த பிரபுவை மடக்கிப் பிடித்து சங்கராபுரம் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் சிறுமியை அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.