கோவை மாவட்டம் சூலூர் நூர்பாலையில் தங்கி வேலை பார்த்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற காதலனை சூலூர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசூரில் உள்ள தனியார் நூற்பாலையில் அங்கேயே தங்கி பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் அவரது சகோதரருடன் ஊருக்கு செல்ல வந்த போது திடீரென காதலனுடன் சென்று மாயமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை அந்தப் சிறுமி மற்றும் அவருடைய காதலன் பவானியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன் (24) என்பவரையும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு கட்டுமான இடத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இருவரையும் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் 16 வயது சிறுமையை கணபதியில் உள்ள அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். காதலன் தாமரைக் கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அண்ணனுக்கு போக்கு காட்டி விட்டு பைக்கில் தப்பிச்சென்ற சிறுமியின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.