Categories: தமிழகம்

காணாமல் போன நபர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு : கல்லைக் கட்டி கொலை? விசாரணையில் பரபரப்பு திருப்பம்!!

உடலில் கல் கட்டிய நிலையிலும்,வெட்டு காயங்களும் உள்ளதால் கொலையா என்ற கோணத்தில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நொச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார்.

இவரது சகோதரர் கந்தசாமி திருச்சியில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு இங்கு வந்து தனது சகோதரி வீட்டில் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற கந்தசாமி வீடு திரும்பவில்லை. இது குறித்து ரேணுகா தேவி அன்று இரவு பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கந்தசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில் அவரப்பாளையம் பகுதியிலுள்ள குட்டை அருகே உள்ள கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று வயிற்றில் கல்லை கட்டிய நிலையில் மிதப்பதாக அப்பகுதி மக்கள் பல்லடம் போலீசாருக்கு இன்று தகவல் அளித்தனர்.

தகவலறிந்த சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர்.

இதனையடுத்து போலீசாரின் விசாரணையில் கிணற்றில் மிதந்த சடலம் கந்தசாமி என்பது தெரியவந்தது. காணாமல் போன கந்தசாமியின் சடலம் கிணற்றில் கிடந்துள்ளது.

மேலும் கந்தசாமியின் உடலில் வெட்டு காயங்கள் உள்ளதால் கொலை செய்து கல்லை கட்டி கிணற்றில் போட்டார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கந்தசாமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு? ஒரு பயனும் இல்லை- பேட்டியில் வாய்விட்ட பிரபல தயாரிப்பாளர்!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…

9 minutes ago

பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்… அலறிய பயணிகள் : கோவை காந்திபுரத்தில் அதிர்ச்சி!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…

28 minutes ago

இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…

1 hour ago

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

2 hours ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

2 hours ago

மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…

3 hours ago

This website uses cookies.