கோவை : சிங்காநல்லூர் பகுதியில் தூய்மை பணிக்குச் சென்ற 27 வயது பெண் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.
கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரியை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மனைவி தேவி (வயது 27). இவர் தனது சகோதரி சத்யா (வயது 33) என்பவருடன் சேர்ந்து கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இருவரும் உப்பிலிபாளையத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து தேவியை காணவில்லை. சத்யா அவரை பல இடங்களில் தேடினார். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கிய நிலையில் தேவி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சத்யா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தேவியை மீட்க முயன்றதோடு, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கிய தேவியை சடலமாக மீட்டனர். இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. தேவி தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த போது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்றும் விசாரித்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.