தமிழகம்

விஜய் – ஸ்டாலின் ஒரே நாளில் மறைமுக மோதல்.. பரபரப்பில் அரசியல் களம்!

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் மறைமுகமாக விமர்சித்தது பேசுபொருளாகியுள்ளது.

திருநெல்வேலி: இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று நெல்லை சென்றார். அப்போது, பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றதன் வகையில், நெல்லை பாளையங்கோட்டை நேரு கலையரங்கில் திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

இதில், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் தயா சங்கர், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் வேல் ஆறுமுகம் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். பின்னர், இந்த நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், “மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

கட்சி தொடங்கிய உடனே தான்தான் முதலமைச்சர் என்று கூறுவது எல்லாம் மக்களிடம் எடுபடாது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்யும் இயக்கம் திமுக” எனத் தெரிவித்தார். இதன் மூலம், தவெக தலைவர் விஜயை, ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்தார்.

அதேநேரம், நேற்று தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “பெரியாரே எங்கள் தலைவர்; தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்’ என்று சூழலுக்கு ஏற்றவாறு தங்களின் சுயலாபத்திற்காக மட்டுமே அவரைப் பற்றிப் பெருமை பேசும் தற்போதைய ஆட்சியாளர்கள், சமூக நீதியைக் காக்கும் செயல்பாடான சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்ற வாதத்தையே முன்வைத்து வருகின்றனர்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பாத்ரூம் சென்ற கர்ப்பிணி.. காத்திருந்த கொடூரன்.. இபிஎஸ் காலையிலே போட்ட பதிவு!

முன்னதாக, பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு, “பெரியாரே எங்கள் தலைவர்; தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்’ என ஸ்டாலின் பதில் அளித்திருந்தார். அதேநேரம், சீமானுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது எனக் கூறிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கும் திமுகவின் தலைவர், விஜயை மறைமுகமாக தாக்குவது பேசுபொருளாகியுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.