முதலமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சுவர் ஏறி குதித்து விழா அரங்கிற்குள் புகுந்த சட்டமன்ற உறுப்பினர் விழா மேடையில் இருந்த தலைமை செயலரை பார்த்து எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசு சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா கம்பன் கலையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தலைமை செயலர் ராஜு வர்மா, சட்டமன்ற உறுப்பினர் அணி பால் கென்னடி, உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் இல்லாமல் சுற்றுச்சூழலை பேணி பாதுகாத்த பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அதேபோன்று, சுற்றுச்சூழல் சம்பந்தமாக நடைபெற்ற பல்வேறு கட்டுரை ஓவியம் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி சான்றிதழையும் விருதுகளையும் வழங்கினர்.
அப்பொழுது, விழா நடைபெறும் இடமான கம்பன் கலையரங்கிற்கு உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு, சுவர் ஏறி குதித்து தனது ஆதரவாளர்களுடன் உள்ளே வந்தார். விழா மேடையில் இருந்த தலைமை செயலரை பார்த்து புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்னானது. நகரப்புறங்கள் குப்பை கூலானாக கிடக்கிறது, வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் துர்நாற்றம் வீசுகிறது, இதுவரை திட்டத்தில் என்ன பணிகள் செய்தீர்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
மேலும் புதுச்சேரி மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தை வாங்கி கொண்டு, மக்களுக்கு எதிராக செயல்பட தலைமை செயலர் இந்த ஊரில் இருக்கக் கூடாது. உடனடியாக அவர் வெளியேற வேண்டும். அப்படி இல்லை என்றால் அவரை எதிர்த்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று கூறிய சட்டமன்ற உறுப்பினர் நேரு, சி.எம் இருக்கிறார் என்ற மரியாதைக்காக வெளியே செல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். இதனால் விழா மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமை செயலரை பார்த்து நேருக்கு நேராக கேள்விகளை எழுப்பும் போது, விழா மேடையில் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி ஆகியோர் அமைதியாக அமர்ந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசித் திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முழு நேர அரசியல்வாதியாக எதிர்கொள்ளவுள்ளார் விஜய். தனது கடைசித்…
இடைநிலை ஆசிரியர் நேரடி நியமன தேர்வர்கள் சார்பில் கடந்த 12 ஆண்டுகளாக நிரப்பப்படாத இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து நிரப்ப…
காஞ்சிபுரம் அடுத்துள்ள சின்னயங்குளம் பகுதியில் புதிதாக பெட்ரோல் பங்க் சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும்…
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
This website uses cookies.