ஈவு இரக்கமே இல்லாமல் தான் பெற்ற இரண்டு மகள்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காமக்கொடூர தந்தையை போக்சோ சட்டத்தில் அரக்கோணம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி பார்த்திபன் (வயது 42). இவருக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது .
மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் 9ம் வகுப்பும், இளைய மகள் 8 ம் வகுப்பும் படிக்கின்றனர். இந்நிலையில் தான் பெற்றெடுத்த இரண்டு மகள்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
தந்தை தன்னிடம் தவறாக நடக்கிறார் என்பதை அந்த சின்னஞ்சிறு பெண் பிள்ளைகளால் முழுவதுமாக உணர முடியவில்லை .
இதற்கு இடையே மாவட்ட சமூக பாதுகாப்பு நலத்துறை சார்பில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது தான் தன்னுடைய தந்தை தன்னிடம் தவறாக நடக்கிறார் என்பதை உணர்ந்து ஆசிரியர் ஒருவரிடம் அக்காள், தங்கை தெரிவித்துள்ளனர்.
அந்த ஆசிரியர் தைரியமாக மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம் புகார் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து மாவட்ட சமூக பாதுகாப்பு துறையினர் விசாரணை நடத்தியதில் உண்மை என்பது தெரியவந்தது.
பின்னர் தந்தை மீது மகள் ஒருவர் அரக்கோணம் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காமக்கொடூர தந்தையான கட்டட மேஸ்திரி பார்த்திபனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேலும் அவரது மனைவியிடம் போலீசார் விசாரித்த போது எனக்கு எதுவுமே தெரியாது என்று கணவனுக்கு மனைவி வக்காலத்து வாங்கியுள்ளார்.
மேலும் நடக்கும் சம்பவங்கள் எதையும் வெளியில் சொல்லக்கூடாது என்றும் மனைவியை குடிபோதையில் அடிக்கடி கொடுமை படுத்தியுள்ளான்.
இதற்கு பயந்து கொண்டு மனைவி போலீசாரிடம் வாய் திறக்காதது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் காவேரிப்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.