Categories: தமிழகம்

கரும்பு காட்டுக்குள் கட்டு கட்டாக பணம்: ரூ.1 கோடி பணம் மீட்பு.. விசாரணையில் பகீர் தகவல்!!

ஆத்தூர் அருகே கரும்பு தோட்டத்தில் ஒரு கோடி பணம் மீட்ட போலீசார் விவசாயிடம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் சார்வாய் புதூர் கிராமத்தில் சாமியார் கிணறு என்ற பகுதியை சேர்ந்தவர் விவசாயி லோகநாதன்(45).

இவர் தனது மனைவி மற்றும் தாயுடன் விவசாய தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 7 தேதி இரவு அப்பகுதியில் உள்ள புத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவரது வீட்டில் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த இரண்டு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து ஒரு கோடி ரூபாய் கொள்ளை போனதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தனது வீட்டில் இருந்த 48,000 ரூபாய் மற்றும் கால் பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாகவும் முதலில் கூறியுள்ளார்.

பின்னர் சிறிது நேரத்தில் தனது நண்பர் மணிவிழந்தான் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கணேசன் மகன் கோபாலகிருஷ்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரண்டு பேக்கில் இரண்டு கோடி பணத்தை எனது வீட்டிற்கு கொண்டு வந்து அதை பாதுகாப்பாக வைக்கும் படி கூறிச் சென்றனர்.

அதில் வைத்திருந்த ஒரு கோடி பண பேக்கை முகமூடி கொள்ளையர்கள் எடுத்துச் சென்றதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது,

இதனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த போலீசார் தடயறிவியல் நிபுணர்களை வரவழைத்து வீட்டில் தடயங்களை சேகரித்து தொடர்ந்து அவரது நண்பர் கணேசனையும் வரவழைத்து விசாரணை செய்து இரண்டு கோடி ரூபாய் பணம் எப்படி வந்தது என்றும் விசாரித்தனர்.

அப்போது இரண்டு பேரும் முறையாக பதில் அளிக்காமல் மாறி மாறி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மூன்று தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.

இதனையடுத்து டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர கிடுக்குப் பிடி விசாரணையை தொடங்கியுள்ளனர். அப்போது நேற்று தனது கரும்பு தோட்டத்தில் ஒரு கோடி ரூபாய் பணபேக்கை முகமூடி கொள்ளையர்கள் வீசி சென்றதாக போலீசாரிடம் கொடுத்த தகவலின் பேரில் டி எஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் காணாமல் போனதாக கூறப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணம் விவசாயி லோகநாதரிடம் எப்படி வந்தது பனம் கொள்ளை போனதாக கூறப்பட்ட சம்பவம் குறித்தும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

எங்க கூட்டணிக்கு விஜய் வந்தால் சிவப்பு கம்பளம் தயார்… பாஜக பகிரங்க அறிவிப்பு!

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…

21 minutes ago

எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…

27 minutes ago

16 வயது சிறுவனுடன் உடலுறவு.. வசமாக சிக்கிய 35 வயது டீச்சர்!

16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…

47 minutes ago

ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!

கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…

1 hour ago

மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாய் இருந்து மனைவி கொடூர கொலை : சிக்கிய ஜிம் மாஸ்டர்!

மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…

2 hours ago

நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…

வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…

3 hours ago

This website uses cookies.